காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பு இல்லை

காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பு இல்லை

Share it if you like it

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார். அடுத்த மாதம் 30-ம் தேதி தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அண்மையில் சோனியா, ராகுலை, ஷர்மிளா சந்தித்து பேசினார். மேலும் காங்கிரஸ் கட்சியுடன் ஒ.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை இணைக்கவும் அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஷர்மிளா, காங்கிரஸ் கட்சியின் தங்கள் கட்சியை இணைக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இணைப்பு குறித்து பேசி நான்கு மாதங்கள் ஆகியும் காங்கிரஸ் கட்சியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ள ஷர்மிளா வரும் தேர்தலில் அனைத்து இடங்களில் ஒய்.எஸ். ஆர்.தெலங்கனானா கட்சி போட்டியிடும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Share it if you like it