பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

Share it if you like it

சிவகங்கை மாவட்டம் முதுவன்திடம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கௌரி மகாராஜன். இவர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர். அதே ஊராட்சியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ராஜ்குமார் செயலாளராக இருந்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவர் பட்டியலின சாதியை சேர்ந்தவர் என்பதால் கௌரி மகாராஜனை தொடர்ந்து தரக்குறைவாக நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஊராட்சி மன்ற பொதுக்கூட்டம் நடைபெறும்போது நாற்காலியில் அமரவிடாமல் ராஜ்குமார் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த கௌரி மகாராஜன் மாவட்ட ஆட்சியரிடம், ஊராட்சி மன்ற செயலாளர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்கமாறு புகார் அளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தன்னுடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *