பாஜக மீது மக்களுக்கு கோபமும், எதிர்ப்பும் இல்லை : தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் !

பாஜக மீது மக்களுக்கு கோபமும், எதிர்ப்பும் இல்லை : தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் !

Share it if you like it

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் நேற்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நான் கடந்த சில வாரங்களாகவே கூறி வருகிறேன். 2019-ல் பெற்ற இடங்களைப் போலவோ (303 இடங்கள்) அல்லது அதை விட சற்று கூடுதலாகவோ பாஜக பிடிக்கும்.

இந்தத் தேர்தலின் அடிப்படையை நாம் பார்க்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு எதிராக, பாஜக தலைவர்களுக்கு எதிராக சிறிய அளவில் எதிர்ப்பு இருந்தாலும், மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்து மாற்றத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால், நாடு தழுவிய அளவில் மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு எதிராகவும் நாம் மக்களின் கோபத்தை பார்க்க முடியவில்லை.

மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பு, அதிருப்தி அலை மக்களிடம் இல்லை. தேர்தல் முடிவைத் திருப்பிப் போடும் அளவுக்கு மக்கள் மத்தியிலான பரவலான கோபத்தைப் பற்றி நாம் கேள்விப்படவில்லை.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தால் சிறப்பாக இருக்கும் என்ற வாக்கியங்களை நாம் எங்கேயும் கேட்க முடியவில்லை.

ராகுல் காந்தி ஆட்சிக்கு வரலாம் என்று அவருடைய ஆதரவாளர்கள் தான் சொல்கிறார்களே தவிர, நாட்டு மக்கள் இந்த இக்கருத்தை சொல்லவில்லை.

பாஜகவுக்கு எதிராக பரவலான கோபமோ அல்லது சவாலாக இருக்கும் எதிர்ப்பு குரலோ இங்கு இல்லை. அதனால் ஆளுங்கட்சி பெறும் சீட்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் மற்றுமொரு வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வழிநடத்துவார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு திரும்பும் என்றே நான் நினைக்கிறேன்.

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *