புதிதாக மூன்று வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி !

புதிதாக மூன்று வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி !

Share it if you like it

புதிதாக 3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை நாளை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் & மதுரை மற்றும் பெங்களூரு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நாளை, (ஆகஸ்ட் 31,ம் தேதி) காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வழியாக தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து பெங்களூரு வந்தே பாரத் சிறப்பு ரயிலின் கொடியேற்றும் நிகழ்வில் ரயில்வே மற்றும் ஜல்சக்தி துறை அமைச்சர் வி.சோமண்ணா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *