பிரதமர் மோடி பதவியேற்பு விழா : விவிஐபி வரிசையில் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், திருநங்கைகள் !

பிரதமர் மோடி பதவியேற்பு விழா : விவிஐபி வரிசையில் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள், திருநங்கைகள் !

Share it if you like it

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியானது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் மோடி அரசுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிலையில், நாட்டின் பிரதமராக வரும் 9 ஆம் தேதி மோடி பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. முன்னதாக 8 ஆம் தேதி பதவி ஏற்பு இருந்தது. பதவி ஏற்பு விழாவில் உலக தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் 9 ஆம் தேதி தள்ளி வைக்கப்ட்டது. இதற்கான பதவி ஏற்பு இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் அரசியல் தலைவர்கள், பிரபலங்களை தாண்டி புதிய நாடாளுமன்றத்தை கட்டிய கட்டிட தொழிலாளர்கள், வந்தே பாரத் ரயில் மற்றும் மெட்ரோ ரயில்கள் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர்கள், துப்புரவு பணியாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்டோரை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இவர்கள் அனைவரும் விவிஐபி வரிசையில் அமர வைக்கப்பட உள்ளனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *