வங்கக்கடலில் உருவாகியுள்ள ‛மிக்ஜாம்’ புயல், இன்று (டிச.,4) சென்னை வழியாக ஆந்திராவுக்கு செல்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. சில இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் மழைநீர் புகுந்துள்ளது.