24 மணி நேரத்திற்குள் விடுதலை – மனம் குளிர்ந்த மீனவர்கள் !

24 மணி நேரத்திற்குள் விடுதலை – மனம் குளிர்ந்த மீனவர்கள் !

Share it if you like it

இலங்கை கடற்படையால் மீன்கள் பிடிக்க சென்ற 22 பாம்பன் மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது குடும்பத்தினர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நிர்மலா சீதாராமன், இந்த விவகாரத்தை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கொண்டு சென்றார். வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதையடுத்து, மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது. மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது. தொடர்ந்து, 22 மீனவர்களும் இன்று ராமேஸ்வரம் திரும்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கைதான 24 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் அதற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர்கள் நன்றியை தெரிவித்தனர்.


Share it if you like it