மணல் கொட்டியதை தட்டிக் கேட்டவர் மண்டை உடைப்பு: தி.மு.க. கவுன்சிலர் கணவர் அராஜகம்: வீடியோ வைரல்!

மணல் கொட்டியதை தட்டிக் கேட்டவர் மண்டை உடைப்பு: தி.மு.க. கவுன்சிலர் கணவர் அராஜகம்: வீடியோ வைரல்!

Share it if you like it

உறவினர் இடத்தில் மணல் கொட்டியதை தட்டிக் கேட்ட நபரின் மண்டையை, தி.மு.க. கவுன்சிலரின் கணவர் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. என்றாலே கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, நில அபகரிப்பு உள்ளிட்ட அராஜகவாதிகள் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கேற்றார் போல், தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, நில அபகரிப்பு, குஸ்தி உள்ளிட்ட அடாவடிகள் அரங்கேறும். அந்தவகையில், தற்போது தி.மு.க. மீண்ுடம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. இதையடுத்து, அக்கட்சியினரின் அராஜகங்களும் அதிகரித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கட்டப்பஞ்சாயத்து களைகட்டி வரும் நிலையில், அடிதடி போன்ற அராஜக செயலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சேலத்திலும் ஒரு அராஜக சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை இடங்கணசாலை நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது பக்கத்து வீட்டில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். ரமேஷ் வீட்டிற்கு அருகே அவரது உறவினர் ஒருவருக்குச் சொந்தமான காலி மனை இருக்கிறது. இந்த சூழலில், ரமேஷ் உறவினரின் காலி மனையில், இளங்கோவன் மணல் கொட்டி இருக்கிறார். இதைக் கண்ட ரமேஷ், மணலை அப்புறப்படுத்தும்படி கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த குமார், அதைக் கேட்க நீ யார்? உன் இடமா? என்று இளங்கோவன் கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து, இடங்கணசாலை நகராட்சி 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் குமாரிடம் விஷயத்தை சொல்லி இருக்கிறார் இளங்கோவன். பின்னர், குமார் அடியாட்களுடன் ரமேஷ் வீட்டிற்கு வந்து தகராறு செய்திருக்கிறார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, குமார் தனது அடியாட்களுடன் ரமேஷ் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கியதோடு, வெளியே இழுத்துப் போட்டும் சரமாரியாகத் தாக்கினார். இதைப் பார்த்து மிரட்சியடைந்த ரமேஷின் மனைவி தாமரைச்செல்வி, கவுன்சிலர் கணவர் குமாரின் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டிருக்கிறார்.

ஆனாலும், மனமிறங்காத குமார், ரமேஷை சரமாரியாகத் தாக்கினார். இதில், ரமேஷின் மண்டை உடைந்தது. இதைத் தொடர்ந்து ரமேஷ், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இச்சம்பவத்தை பக்கத்து வீட்டு மாடியில் இருந்து வீடியோ எடுத்த ஒருவர், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தி.மு.க.வினரின் அராஜக செயலை கண்டித்து வருகின்றனர்.


Share it if you like it