பருவமழை எதிரொலி – விடியல் அரசின் நடவடிக்கைகள் என்ன? புள்ளி விவரத்துடன் கருத்தை பதிவு செய்த பிரபல பத்திரிக்கையாளர்..!

பருவமழை எதிரொலி – விடியல் அரசின் நடவடிக்கைகள் என்ன? புள்ளி விவரத்துடன் கருத்தை பதிவு செய்த பிரபல பத்திரிக்கையாளர்..!

Share it if you like it

சென்னை மாநகராட்சி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரபல பத்திரிக்கையாளர் கருத்து.

பருவ மழை துவங்கும் முன்பே சென்னையில் உள்ள கால்வாய்களை, முதல்வரின் வழிகாட்டுதல் படி நாங்கள் தூர்வாரி உள்ளோம். என நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் சில அமைச்சர்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் கூறி வந்தனர். ஆனால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை ஓய்ந்த பின்பே, கால்வாய்களை தூர்வாரும் பணி முடக்கி விடப்பட்டது என்பது நிதர்சனம்.

பொதுமக்கள் உட்பட பலர் மிக கடுமையான குற்றச்சாட்டை விடியல் அரசு மீது சுமத்தி வரும் நிலையில். பிரபல அரசியல் விமர்சகர், பத்திரிக்கையாளர், என பன்முகத்தன்மை கொண்ட சந்தியா ரவிசங்கர் அவர்கள் ஆளும் கட்சி செய்த தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். ஆனால் இது குறித்து எந்த ஒரு முன்னணி ஊடகமும், வாய் திறக்காமல் கள்ள மெளனம் காத்து வருவது ஏன்? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it