சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : முகமது ஆஸிப் போக்ஸோவில் கைது !

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : முகமது ஆஸிப் போக்ஸோவில் கைது !

Share it if you like it

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் சிறுமிகளுக்கு முகமது ஆஸிப் என்பவர் அரபி வகுப்பை எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் முகமது ஆஸிப் பள்ளிவாசலில் பயின்று வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளிவாசலுக்கு நேரில் சென்று சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் முகமது ஆஸிப் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சார்பில் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் பள்ளிவாசல் அரபி ஆசிரியர் முகமது ஆஸிப்பை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *