திமுகவில் பல் இளிக்கும் சமூகநீதி : தோழமை சுட்டிய விசிக !

திமுகவில் பல் இளிக்கும் சமூகநீதி : தோழமை சுட்டிய விசிக !

Share it if you like it

பட்டியலின அரசு அதிகாரிகளின் பதவி உயர்வைப் பறித்து அவர்களைக் தமிழக அரசு கீழிறக்கம் செய்வதாகவும், இதுகுறித்து அமைச்சர் கயல்விழியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விழுப்புரம் தொகுதி விசிக அமைச்சர் ரவிக்குமார் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

பதவி இறக்கப்படும் எஸ்சி அரசு அதிகாரிகள்

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு கடைபிடித்துவந்த ரோஸ்டர் முறையை எதிர்த்து ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்ட உத்தரவைக் காரணமாகக் காட்டி எஸ்சி அரசு அதிகாரிகளின் பதவி உயர்வைப் பறித்து அவர்களைக் கீழிறக்கம் செய்கிறது தமிழ்நாடு அரசு. இதைத் தடுப்பதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ளதைப்போல சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனக் கடந்த ஆண்டு இதே நாளில் மாண்புமிகு அமைச்சர் கயல்விழி அவர்களிடம் மனு அளித்தேன். ஆனால் அந்த அநீதி இதுவரை நிறுத்தப்படவில்லை.

விசிக சார்பில் தலைவர் எழுச்சித் தமிழரும் நானும் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளிடத்தில் இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்தோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம்.

இப்போதுகூட வேளாண் துறையில் 39 துணை இயக்குநர்கள் பதவி இறக்கம் செய்யப்படுகின்றனர் என்றும் அதில் 37 பேர் எஸ்சி வகுப்பினர் என்றும் அறிகிறேன். இப்படியே போனால் இனிமேல் எஸ்சி வகுப்பைச் சேர்ந்த ஒருத்தர் கூட உயர் பதவிக்கு வர முடியாது. இதைத் தமிழ்நாடு அரசு தடுக்க முடியாதா? இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு வாயை திறந்தால் சமூக நீதி சமூக நீதி என்று சொல்கிறது. ஆனால் பட்டியலின அரசு அதிகாரிகளின் பதவி உயர்வைப் பறிக்கும் அவலங்களை நீக்குவதற்கு திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இதுதான் திமுகவின் சமூக நீதியா ?


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *