50 வருட நாத்திகத்தை ஐந்தே வருடத்தில் உடைத்தவர்: ரஜினிக்கு புகழாரம் சூடிய ஆன்மிக சொற்பொழிவாளர்!

50 வருட நாத்திகத்தை ஐந்தே வருடத்தில் உடைத்தவர்: ரஜினிக்கு புகழாரம் சூடிய ஆன்மிக சொற்பொழிவாளர்!

Share it if you like it

50 வருடமாக நாத்திகமாக மாற்றி வைத்திருந்த தமிழகத்தை ஐந்தே வருடத்தில் ஆன்மிக பூமியாக மாற்றிக் காட்டியவர் ரஜினிகாந்த் என்று ஆன்மிக சொற்பொழிவாளர் விட்டல் தாஸ் மஹாராஜ் புகழாரம் சூட்டி இருக்கிறார்.

பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் விட்டல் தாஸ் மஹாராஜ். இவரது சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம். பகவான் கிருஷ்ணரை பற்றிய இவரது சொற்பொழிவுகள், கேட்கக் கேட்க இனிமையாக இருக்கும். இந்த சூழலில், இவரது சொற்பொழிவு ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பேசும் சொற்பொழிவாளர் விட்டல் தாஸ் மஹாராஜ், இந்த தமிழகம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாத்திக கும்பலால் சீரழிந்து கிடந்தது. இதை தனது திரைப்படங்கள் மூலம் உடைத்து எறிந்தவர் ரஜினிகாந்த்.

திரைப்படம் என்பதுதான் இந்த உலகத்திலேயே மிகப்பெரிய ஊடகம். அப்படிப்பட்ட சினிமாவில் நெற்றியில் விபூதி பட்டையும், கழுத்தில் ருத்ராட்சமும் அணிந்து திரைப்படங்களில் இவர் தோன்றியதின் மூலம் 50 வருடங்களாக நாத்திக பூமியாக இருந்த தமிழகத்தை ஐந்தே வருடங்களில் ஆன்மிக பூமியாக ஆஸ்திக பூமியாக மாற்றிக் காட்டியவர். இவருக்கு நமது ஹிந்து சமுதாயமே கடமைப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார். பதிலுக்கு ரஜினியும் தனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it