என்னது ! டீ காபிக்கு 1.34 லட்சம் செலவா ?

என்னது ! டீ காபிக்கு 1.34 லட்சம் செலவா ?

Share it if you like it

சென்னை நுங்கம்பாக்கத்தில், அறநிலையத்துறையின் கீழ், அகத்தீஸ்வர பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் நிதியில் இருந்து, அறநிலையத்துறை அதிகாரிகள், 1.34 லட்சம் ரூபாயை கையாடல் செய்துள்ளதாக ஓய்வு பெற்ற அதிகாரியான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-20218 ஆம் ஆண்டு மட்டும் 1.34 லட்சம் ரூபாயை டீ காபி மற்றும் நொறுக்கு தீனிக்காக செலவிட்டுள்ளதாக அறநிலையத்துறை கணக்கு காட்டியுள்ளது. கோவில் நிதியை தவறாக பயன்படுத்துபவர்களும் குற்றவாளிகள்தான்.

இதுதொடர்பாக “ஆலயம் காப்போம்” அமைப்பை சார்ந்த ஆடிட்டர் ரமணன் புகார் அளித்துள்ளார். அந்த அமைப்பின் ஆலோசகராக பொன் மாணிக்கவேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it