வெறும் போஸ்டர் இல்லை -மிஷனரிகளின் மாபெரும் ப்ராஜெக்ட்..!

வெறும் போஸ்டர் இல்லை -மிஷனரிகளின் மாபெரும் ப்ராஜெக்ட்..!

Share it if you like it

கடத்த சில தினங்களுக்கு முன்பு ஏசுவே தமிழகத்தை ரட்சியும் என்ற போஸ்டர்கள் மாநிலம் முழுவதும் பெருவாரியான இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது. குறிப்பாக ஹிந்துக்கள் புழங்கும் இடங்களிலும் கோவில் சுவர்களிலும் ஒட்டப்பட்டிருந்தது. ஒரே இரவில் ஒரு மாநிலம் முழுவது ஒரே மாதிரியான போஸ்டர்களை ஒட்டுவது என்பது, இதற்க்கு பின்னால் நீண்ட கால திட்டமிடல் மற்றும் ஏதோ உள் நோக்கம் இருப்பதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

குறிப்பாக ஆங்கில புத்தாண்டு மீதான மோகம் மக்களுக்கு குறைந்து தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட இளைஞர்கள் உட்பட பலரும் தயாராகி வந்த நேரத்தில் இப்படி ஒரு போஸ்டர் ஒட்டுவது என்பது அவர்களின் கொண்டாட்ட மனப்பான்மையை குலைக்கும் உளவியல் ஆயுதம் என்றே கூறவேண்டும்.

புத்தாண்டு மட்டுமல்ல அடுத்து வரும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி உள்ளிட்ட மாதங்களில் ஹிந்துக்களின் பண்டிகை அதிகம் சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடி 18, ஆடி மாத கூழ், ஆடி அமாவாசை என சொல்லிக் கொண்டே போகலாம்.. அடிப்படைவாத கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி ஹிந்து தெய்வங்கள் சாத்தான்கள், எனவே ஹிந்து தெய்வங்களின் பண்டிகை அதிகம் வருவதால் அதை மறக்கவும்,மறைக்கவுமே இந்த சுவரொட்டி.

இதன் உள்நோக்கத்தை ஆழ்ந்து சிந்தித்தால் நமக்கு புலப்படும்.

மேற்குறிப்பிட்ட மாதங்களில் கிருஸ்தவ பண்டிகைகள் குறைவு. குறைவு என்பதை விட இல்லை என்றே சொல்ல வேண்டும். எனவே சமூகத்தில் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ளவும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம்.

இதனோடு சேர்த்து வேறு சில அரசியல் காரணங்களும் இதற்க்கு பின்னால் இருப்பதாகவே நமக்கு தோன்றுகிறது. இத்தனை நாட்களாக சிறுபான்மை ஓட்டு வங்கியை வைத்து கொண்டு ஆளும் அரசுகளையே ஆட்டிவைத்த இவர்கள் ஆண்டாள் விவகாரம், கருப்பர் கூட்ட விவகாரம், வேல் யாத்திரை என ஹிந்து வாக்கு வாங்கி உருவாகி இருப்பதை கண்டு அடிவயிறு கலங்கி இருப்பதை ஆணித்தரமாக நாம் ஓப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இதுபோன்ற ஹிந்து எழுச்சியின் மூலமும், மத்தியில் பாஜக ஆட்சி வந்ததில் இருந்து வெளிநாட்டு நிதி குறித்த கராரான நடவடிக்கை மூலமும், காருண்யா ரைடு உள்ளிட்ட அதிரவைக்கும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மூலமும் மதமாற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ரா. சற்குணம் உள்ளிட்ட பல அடிப்படைவாத பாதிரிகள் புலம்பிய வீடியோவினை நாம் பார்த்திருப்போம், அதுவும் இதற்கு ஒரு முக்கிய கரணம் தான்.

மேலும் தேர்தல் முடிந்துள்ள நேரம். சிறுபான்மையினரின் வாக்கு சதவிகிதம் குறைந்து பெண்களின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது இதனால் திமுகவின் ஆட்சி அமையுமா என்ற பயத்தில் அக்கட்சி தலைமை பரபரக்க. திமுக எனும் கருவேல மரத்தின் நிழலில் வேர் பரப்பிய விஷ காளான்களான மிஷனரிகளுக்கும் அந்த பயம் தொற்றிக்கொள்வதில் ஐயமில்லை.

ஒரு வேலை இதுபோன்ற செயலில் ஹிந்துக்கள் ஈடுபட்டு, சர்ச்சு வாசலில் ஹிந்துக்களின் போஸ்டர்களை ஒட்டி இருந்தால் இந்த ஊடகங்களும், அரசியல் வியாதிகளும் சும்மா இருத்திருப்பார்களா..? கலவரத்தை உருவாக்கும் நோக்கம் என கத்திக்கொண்டு இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது இவர்கள் மௌனம் காக்கின்றனர்…

இவற்றுக்கெல்லாம் மேலாக வெறும் போஸ்ட்டர் என்ன செய்துவிடும் என கேள்வி கேட்கும் அறிவு ஜீவீகளே, பள்ளிக்கு அருகில் ஆபாச போஸ்ட்டர்களை ஒட்ட கூடாது என ஏன் அரசாங்கமும் மற்ற இயக்கங்களும் சொல்கிறது … காரணம் ஒரு போஸ்ட்டர் மாபெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அது போலத்தான் மிஷ “நரி” களின் இந்த செயலும் ஹிந்துக்கள் மீது ஏவப்பட்ட மாபெரும் உளவியல் ஆயுதம்.

நன்றி
விக்னேஷ் வாசுதேவ்.R


Share it if you like it