தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்

தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்

Share it if you like it

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதை நிறுத்தி வைத்து தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்து. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத்தியுள்ளார். தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பு தமிழகத்திற்கு மருத்துவத்துறையில் புதிய முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பை முற்றிலுமாக இல்லாமல் செய்துவிடும் என்றும் எனவே இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக மாநில அரசுகளை கலந்து ஆலோசனை நடத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடித்ததில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.


Share it if you like it