பைபிளை வைத்துக்கொண்டு வீடு வீடாக திருடும் பலே கில்லாடி பாட்டியை போலீசில் ஒப்படைத்த மக்கள் !

பைபிளை வைத்துக்கொண்டு வீடு வீடாக திருடும் பலே கில்லாடி பாட்டியை போலீசில் ஒப்படைத்த மக்கள் !

Share it if you like it

மூதாட்டி ஒருவர் வீட்டில் புகுந்து நகைகள் பணத்தை திருடிய சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாங்காடு அருகே உள்ள பகுதியில் மூதாட்டி ஒருவர் கைகளில் பைபிள் வைத்துக்கொண்டு அந்த பகுதியில் சுற்றி வந்துள்ளார். அப்போது திடீரென ஒரு வீட்டுக்குள் புகுந்து பீரோவில் உள்ள நகைகளை எடுத்து கொண்டு படிக்கட்டு வழியே இறங்கியுள்ளார். இதனை பார்த்த ஒரு பெண் அந்த மூதாட்டியை யார் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்த மூதாட்டி தான் வீடு மாறி வந்துவிட்டதாக கூறி வேகவேகமாக படியிலுருந்து கீழே இறங்கியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த மூதாட்டியை பிடித்து சோதனை செய்ததில் தங்க நகை ஒன்றை அந்த மூதாட்டி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் மூதாட்டியின் கையில் வைத்திருந்த பைபிளை சோதனை செய்ததில் அதில் சில துண்டு சீட்டுகள் இருந்துள்ளது. அந்த துண்டு சீட்டில் எந்நெந்த பகுதிக்கு எந்தெந்த வீட்டிற்கு சென்று திருட வேண்டும் என்று பட்டியல் போட்டு வைத்துள்ளார். முதலில் வீட்டை நோட்டமிட்டு ஆளில்லா வீட்டை குறிவைத்து திருடுவதையும் அப்போது யாராவது பார்த்துவிட்டால் இது டீச்சர் வீடுதானே என்று சமாளிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார் அந்த திருட்டு மூதாட்டி. இந்த நிலையில் அந்த திருட்டு மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *