பிரிவினையை தூண்டும் திருமா… காசா… பணமா… அடிச்சி விடுங்க!

பிரிவினையை தூண்டும் திருமா… காசா… பணமா… அடிச்சி விடுங்க!

Share it if you like it

பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ந்தால், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறித்து விடுவார்கள் என வாய்க்கு வந்தபடி உளறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், மத்திய அரசுக்கு எதிராகவும், பாரதப் பிரதமர் மோடிக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவிப்பதையே தனது கொள்கையாக கொண்டவர். இதுதவிர, ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் அவர்களின் வழிபாட்டுமுறைகளை தொடர்ந்து கொச்சையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில், , வழக்கத்தில் இல்லாத மனுஸ்மிருதி நூலை மேற்கோள் காட்டி ஹிந்து பெண்களை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பேசி இருந்தார்.

இப்படியாக, திருமாவின் அருவருக்கதக்க பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், கிறிஸ்தவர்கள் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திருமா பேசியதாவது: பா.ஜ.க. இந்தியாவின் பெயரை மாற்ற இருக்கிறது. தலைநகரை மாற்ற இருக்கிறது. சட்ட திட்டங்களை மாற்ற இருக்கிறது. அதனையும் வெளிப்படையாக அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். தேசத்தின் பெயர் இனி இந்தியா என்று இருக்காது. அது, ஹிந்து ராஷ்டிராவாக இருக்கும். இந்தியாவின் தலைநகராக புதுடெல்லி இருக்காது. அது, வாரணாசியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்த சட்ட திட்டங்கள் இனி இந்தியாவில் இருக்காது. மேலும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இந்தியாவில் வாழலாம். அவர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது என வாய்க்கு வந்தபடி உளறி இருக்கிறார். அதன் லிங்க் இதோ.

ஹிந்துக்களிடம் ஒற்றுமையாக இருக்கும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில், பேசி வரும் திருமா போன்றவர்களின் போலி முகத்திரையை சமூக ஆர்வலர்கள் கடுமையாக கண்டிக்க முன்வர வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it