திருவள்ளுவர் மனித குலத்துக்குக் கிடைத்த விலை மதிப்பற்ற தெய்வீகப் பரிசு – ஆளுநர் ஆர்.என்.ரவி !

திருவள்ளுவர் மனித குலத்துக்குக் கிடைத்த விலை மதிப்பற்ற தெய்வீகப் பரிசு – ஆளுநர் ஆர்.என்.ரவி !

Share it if you like it

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (24.05.2024) நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் (வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்) விழாவுக்கு தலைமை தாங்கினார்.

திருவள்ளுவர் திருநாள் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று, 24 மே, 2024 (வைகாசி அனுஷத்தில்) மாபெரும் தமிழறிஞர்களான மறைமலை அடிகளார், திரு. டி.பி. மீனாட்சிசுந்தரம், திரு. வி. கல்யாணசுந்தரம் ஆகியோரின் மரபை போற்றி முன்னெடுக்கும் வகையில், பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருவள்ளுவரின் பக்தர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றிய தங்கள் எண்ணங்களை பல புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் பக்தர்கள் பகிர்ந்து கொண்டனர். திருக்குறளில் உள்ள கருப்பொருள்களை கொண்ட கலாசார நிகழ்ச்சி நடைபெற்றது.
மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தனது தலைமை உரையில், தனது பள்ளிப் பருவத்திலிருந்தே திருவள்ளுவர் மற்றும் திருக்குறளுடன் தனக்கிருந்த நீண்ட தொடர்பையும், சில குறள்கள் தனது வாழ்வை எவ்வாறு வடிவமைத்து மாற்றியமைத்தன என்பதையும் விவரித்தார். “தமிழ்நாட்டு ஆளுநராக பணியாற்றுவதால், திருக்குறளை ஆழமாகப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பரந்த மற்றும் மகத்தான ஆழமான விஷயங்கள் குறித்து ஆச்சரியம் அடைந்தேன்,” என்று அவர் கூறினார். “திருவள்ளுவர் வாழ்க்கை பாடங்களை நமக்கு கற்றுக்கொடுக்கிறார். திருக்குறள் மிகவும் விரிவான தொகுப்பு மற்றும் அனைத்து அம்சங்களைக் கொண்ட ஒரு வாழ்க்கை முழுமைபெறுவது போல ஒருஒருங்கிணைந்த வாழ்வின் மிகப்பெரிய விரிவாக்கத்தைக் கொண்டது,” என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

திருக்குறளின் வகை மொழிபெயர்ப்புகளையும் கருத்துரைகளையும் படித்துள்ளதாக கூறிய ஆளுநர், அவை பெரும்பாலும் அறிவார்ந்த மற்றும் ஆன்மிக சித்தாந்த நோக்கத்துடனும் எழுதப்பட்டவை என்றார்.
“ஒரு சாதாரண மனித மனதால் திருவள்ளுவரையும் அவரது போதனைகளையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அவர் மிகப்பெரியவர் என்று அவர் வலியுறுத்தினார். நன்னடத்தை பற்றிய அவரது விளக்கம், ஆதிபகவான் மீதான முழு பக்தி, இணக்கமான குடும்பம் மற்றும் சமூகத்தை வலியுறுத்துவது, ஆட்சியாளருக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கிய விரிவான பரிந்துரைகள், துறவிகளுக்கு வழங்கிய கடுமையான அறிவுரைகள், விவசாயிகளைப் போற்றியும், சிறிய மற்றும் பெரிய என அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த போதித்து, உண்மையை தேடும் அவரது வேட்கை, ஐம்புலன்களை அடக்கி உடலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அறியும் ஆற்றல் மற்றும் அவரது பிற போதனைகள், ஒருவரால் எப்படி இவ்வாறு சிந்திக்க முடியும் என்றும் தனது எண்ணத்தில் தோன்றிய சிந்தனைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் குறள் வடிவில் சாத்தியமாக்கியிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. அனைத்தையும் அழகாக இயற்றப்பட்ட குறையற்ற குறள்கள் வடிவில் கொண்டு வந்த திருவள்ளுவரின் உயர்ந்த மனிதப் பண்பு மற்றும் நிலைப்புத்தன்மை, தமிழ் மொழி மீதான அவரது அசாதாரண ஆற்றலை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கின்றன.

திருவள்ளுவர் இந்தப் புண்ணிய பூமியில் பிறந்து, தொன்மையான, வளமான தமிழ் மொழியைப் பேசியும், எழுதியும் இருக்கிறார் என்பது நமக்குப் பெருமை. திருவள்ளுவர் மனித குலத்துக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற தெய்வீகப் பரிசு.

புண்ணிய பூமியில் அவதரித்தற்கு நாம் பெருமை கொள்ளவேண்டும். நான் என்னால் முடிந்த அளவு ஒரு மாணவனாக, சீடனாக திருக்குறளை தமிழகத்திற்கு சேர்ப்பேன். கொண்டுச்சேர்ப்பேன். மேற்கத்திய வெளியே கொண்டு நாடுகளுக்கு திருக்குறள் உலகம் மொழிப்பெயர்க்கப்படவேண்டும், முழுவதிலும் நமது பிரதமர் திருக்குறளை பெரிதும் போற்றுபவர், திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார்.

தவத்திரு சுவாமி மகேந்திரா, ஸ்ரீ ஆதி சங்கரர் திருமடம், (கோலாலம்பூர், மலேசியா) அவர்கள் ஆற்றிய உரையில், திருக்குறள் ஒருவரின் உயிரை விட மேன்மையான சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் உள்ளதாக பாராட்டினார். ஆதிசங்கரரின் சித்தாந்தங்களை மலேசியா முழுவதும் செயல்படுத்த இந்த புனித நூல் எவ்வாறு வழிகாட்டியது என்று அவர் விளக்கினார். திருக்குறள் நமது வேதங்களிலும் உபநிடதங்களிலும் வெளிப்படும் விருந்தோம்பலை சிறப்பித்துக் காட்டுகிறது. நற்குணத்தை தன்னுள் வளர்க்க தெய்வீகத்தை உணருமாறும் திருவள்ளுவர் அறிவுறுத்தினார்.

பேராசிரியர் சாமி. தியாகராஜன், தலைவர் திருவள்ளுவர் திருநாள் கழகம், வைகாசி அனுஷம் திருநாளின் சிறப்புகளை நிகழ்ச்சியில் விவரித்தார். பேராசிரியர்.சாமி.தியாகராஜன், திருவள்ளுவர் திருநாள் கழகத் தலைவர் அவர்கள், வைகாசி அனுஷம் திருநாளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, விழா குறித்த விவரங்களை விளக்கினார். திருவள்ளுவர் அவதார தினமாக வைகாசி விசாகத்தை கொண்டாடுகிறார்கள். 1935 ஆம் ஆண்டு மே, 18 வைகாசி அனுஷ்டத்தை அண்ணா கொண்டாடினார். அதை ஒப்புக்கொண்டவர்கள் பின் ஏன் மாற்றினீர்கள்? இன்றைக்கும் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தென் காசியில் வைகாசி விசாகத்தை கொண்டாடுகிறார்கள்.

டாக்டர் டி.கே. ஹரி மற்றும் டாக்டர். ஹேமா ஹரி ஆகியோர், “வைகாசி அனுஷம்” என்பதன் முக்கியத்துவத்தையும், நமது கிரக நிலைக்கேற்ப இந்த நிகழ்வின் தனித்துவத்தையும், திருவள்ளுவருடன் அது கொண்டிருக்கும் ஆழமான தொடர்பையும் எடுத்துரைத்தனர். திருவள்ளுவரை உலகுக்காக தமிழ்நாட்டில் இருந்து வந்த ஒரு ‘தெய்வப் புலவர்’ என்று அழைத்தனர்; மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் கலைமாமணி டாக்டர். சேயோன் அவர்கள், மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அபாரமாகக் கையாண்ட தெய்வீகப் புலவர் திருவள்ளுவர் என்றும் அவரது பெரும் படைப்பான ‘திருக்குறள் உலகப்பொதுமறையாகவும் இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வெற்றிகரமான, அர்த்தமுள்ள இருப்புக்கான நித்திய செய்முறையாகவும் விளங்குகிறது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் – மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி, தவத்திரு சுவாமி மகேந்திரா – ஆதிசங்கர திருமடம், (கோலாலம்பூர், மலேசியா), பேராசிரியர் சாமி. தியாகராஜன், தலைவர் திருவள்ளுவர் திருநாள் கழகம், கலைமாமணி முனைவர் சேயோன், நிறுவனர் – மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், பேரா. இரா. சந்திரசேகரன், இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், முனைவர் டி.கே.ஹரி, முனைவர் டி.கே. ஹேமா ஹரி, திரு.K.கல்யாணசுந்தரராஜன், திருவள்ளுவர் பாசறை (மஸ்கட்), பேராசிரியர் N.லட்சுமி ஐயர், ஹிந்தி துறை, ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், பேராசிரியர் ப.மணிசங்கர், முன்னாள் துணை வேந்தர், பாரதிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *