திருவாரூர் தேரு : ஓட்டியது யாரு : இந்து முன்னணி என்று கூறு !

திருவாரூர் தேரு : ஓட்டியது யாரு : இந்து முன்னணி என்று கூறு !

Share it if you like it

திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோவிலின் ஆழித் திருத்தேர், பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த நிலையில் அதனை இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்கள் தான் மக்களுக்கு புரியவைத்து தேரினை ஓட வைத்தார் என்று இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோவிலின் ஆழித் திருத்தேர், பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த நிலையில் அதனை ஓட வைக்க, இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்கள் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் செய்து திருத்தேர் ஓடினால் ஊருக்கு ஏற்படும் நன்மையினை விளக்கி, வெற்றிலை, பாக்கு வைத்து மக்களை விஷேசத்திற்கு அழைப்பது போல அழைத்து, மக்கள் சக்தியின் மூலம் சாதி பேதமின்றி மக்களெல்லாம் ஒன்று சேர்ந்து வடம் பிடித்து இழுத்தே திருத்தேரினை வலம் வரச்செய்தது இந்துமுன்னணி என்பதில் பெருமிதம் கொள்வோம்…!!


Share it if you like it