ஜம்மு-வில் இரு ஆசிரியர்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்..!

ஜம்மு-வில் இரு ஆசிரியர்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்..!

Share it if you like it

ஜம்மு-காஷ்மீர் பகுதியில், அனைத்து ஆசிரியர் சமுதாயமும் அஞ்சத்தக்க வகையில் கொடூர கொலை நிகழ்ந்துள்ளது. இது ஆசிரியர் சமுதாயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது மட்டுமில்லாமல் திட்டமிடப்பட்ட மற்றும் வெறித்தனத்தின் உச்சமாக அமைந்துள்ள இத்தகைய செயல்கள் நேர்மையாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் தனது பணிகளை செவ்வனே செய்து வரும் ஆசிரியர்களை தங்களுடைய புனிதமான கடமைகளிலிருந்து தள்ளிவைக்க செய்துவிடும். தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு இத்தகைய செயல்களை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் தண்டனையானது ஆசிரியர் சமுதாயத்தின் மீது வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமலிருப்பதாக இருக்க வேண்டும்.

மேலும், ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் மாநில நிர்வாகத்தையும் ஜம்மு-காஷ்மீரில் பரிபூரண அமைதி நிலவிட உரிய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகத்தையும் தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு கேட்டுக்கொள்வதோடு உயிர் இழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு அரசு வேலையும், அவர்களுடைய குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ஒரு கோடி ரூபாயும் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. என்று தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் திரிலோகச்சந்திரன் கேட்டு கொண்டு உள்ளார்.


Share it if you like it