தேர்தலுக்கு பிறகு உதயநிதி எங்கே? – தடா ரஹீம் கேள்வி?

தேர்தலுக்கு பிறகு உதயநிதி எங்கே? – தடா ரஹீம் கேள்வி?

Share it if you like it


உதயநிதி ஸ்டாலின் எங்கே? என தடா ரஹீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் இருந்தால், புதிததாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட அமைச்சர்கள், மூத்த அமைச்சர்கள், உதயநிதியை புகழ்வதில் போட்டி போடுவது ஒருபுறம் என்றால், அவர்களை எல்லாம் ஓவர் டேக் செய்யும் விதமாக தி.மு.க எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உதயநிதிக்கு துதி பாடுவதை பார்த்து தமிழக மக்களே கடும் விமர்சனம் செய்யும் அவலநிலை ஏற்பட்டு இருக்கும் நிலையில். இந்திய தேசிய லீக் கட்சியின் மூத்த நிர்வாகியும், தனக்கு பிடிக்காத மாற்று கட்சியை சேர்ந்த நபர்களையும், பெண்களையும், மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்ய கூடிய தடா ஜெ ரஹீம் அவர்கள் தேர்தலுக்கு முன்பு ஒரு கல்லை காட்டி எய்ம்ஸ் எங்கே? என உதயநிதி கேட்டார். தேர்தலுக்கு பின்பு அவரையே எங்கே? என தேட வேண்டிய நிலை உள்ளதாக கிண்டல் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்து உள்ளார்.

Image
Image
Image

Share it if you like it