பசு மாட்டுக்கு பாலியல் வன்கொடுமை: காமக்கொடூரன் மஜீத் கைது!

பசு மாட்டுக்கு பாலியல் வன்கொடுமை: காமக்கொடூரன் மஜீத் கைது!

Share it if you like it

பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன் மஜீத் என்பவனை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் சரோஜினி தெருவில் வசித்து வருபவர் ஜிதேந்திர யாதவ். இவர் தனது வீட்டில் பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் இவரது பசு மாடு, வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாக சத்தமிட்டிருக்கிறது. இதனால், சந்தேகமடைந்த அவரது பக்கத்து வீட்டுக்காரர் எழுந்து வந்து பார்த்திருக்கிறார். அப்போது, ஒரு நபர் பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, அவர் கூச்சலிடவே, அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான்.

இதையடுத்து, மறுநாள் காலையில் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்திருக்கிறார். அப்போது, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மஜீத் என்பவர்தான் பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஜிதேந்திர யாதவிடம் விஷயத்தை சொல்லி, சி.சி.டி.வி. காட்சிகளையும் காட்டி இருக்கிறார் அந்த நபர், இதையடுத்து, இச்சம்பவம் குறித்து ஜிதேந்திர யாதவ் போலீஸில் புகார் செய்தார். இதையறிந்த கிராம மக்கள் மஜீத்தை பிடிக்க ஒரு குழுவை அமைத்தனர். அந்தக் குழுவினர் நேற்று மஜீத்தை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து மஜீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனிதர்கள் நாய், ஆடு, பசு மாடு என விலங்குகளுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்கலம் கிராமத்தில் ஒருவர் கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது கொட்டகையில் இருந்து ஒரு பசுமாடு மட்டும் அடிக்கடி காணாமல் போனது. பிறகு, தேடிச்சென்று அப்பசுமாட்டை பிடித்து வருவது வழக்கமாக இருந்தது. அதேசமயம், அந்தப் பசுமாடு காணாமல் போகும் போதெல்லாம் ஒரே இடத்தில் இருந்ததுதான் மீட்கப்பட்டது.

இதனால் சந்தேகமடைந்த அந்தப் பசுவின் உரிமையாளர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் அந்த கொட்டகையில் சி.சி.டி.வி. கேமராவை பொறுத்தி கண்காணித்தனர். அப்போது, நள்ளிரவு நேரத்தில் கொட்டகைக்குள் நுழையும் ஒருவர் குறிப்பிட்ட அந்த பசுமாட்டை ஓட்டிச் செல்வது தெரியவந்தது. பின்னர், போலீஸார் அந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது, பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு, அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

அதேபோல, கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கோட்டச்சேரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஆடு ஒன்றை வளர்த்திருக்கிறார்கள். அந்த ஆடு 3 மாத சினையாக இருந்திருக்கிறது. அந்த ஆட்டை அதே ஹோட்டலில் வேலை பார்த்த 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இதில் அந்த ஆடு இறந்து விட்டதுதான் பரிதாபம். தவிர, ராஜஸ்தானில் கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவ்வளவு ஏன், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் பசுமாட்டை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

அட கருமம் புடிச்சவனுங்களே!


Share it if you like it