கருணாநிதித்தனத்தை  அண்ணாமலை கையாள வேண்டும் – மூத்த பத்திரிகையாளர் அட்வைஸ்!

கருணாநிதித்தனத்தை அண்ணாமலை கையாள வேண்டும் – மூத்த பத்திரிகையாளர் அட்வைஸ்!

Share it if you like it

பத்திரிகையாளர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு வரதராஜன் அறிவுரை வழங்கியுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் மற்றும் ’நேதாஜி டிவி’ யூ டியூப் சேனல் நிறுவனராக இருப்பவர் வரதராஜன். இவர், தி.மு.க.வின் தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பத்திரிகையாளர்களை எப்படி? கையாள்வார் என்பது குறித்து இவ்வாறு கூறியிருக்கிறார் ;

இந்த கேள்வியை என்னிடம் கேள் என பத்திரிகையாளர்களிடம் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்பே கூறி விடுவார். அதற்கு, ஏற்ற பதிலை அவரும் முன்பே தயார் செய்து வைத்திருப்பார். மறுநாள், பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு திறமையாக பதில் சொன்னார் கருணாநிதி என இவர் எழுதி கொடுத்ததை அந்த பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டு இருக்கும்.

இதனை தொடர்ந்து, தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது, அரசுக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களின் உரையாடலை டேப் செய்யுமாறு உளவுத்துறைக்கு உத்தரவிடுவார். இதையடுத்து, அன்று இரவே அந்த பத்திரிகை நிறுவன உரிமையாளரிடம் பேசி நாளை அந்த செய்தி வெளியில் வராமல் பார்த்து கொள்வார் என வரதராஜன் கூறியிருக்கிறார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it