தி.மு.க. – வி.சி.க. கூட்டணியில் விரிசலா?: திருமாவளவன் புலம்பல்!

தி.மு.க. – வி.சி.க. கூட்டணியில் விரிசலா?: திருமாவளவன் புலம்பல்!

Share it if you like it

இப்போதெல்லாம் எம்.பி.க்களுக்கு மரியாதை என வி.சி.க. தலைவர் புலம்பி இருப்பது கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவரது, கட்சி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. வி.சி.க. சிறிய கட்சி என்பதால், ஆளும் கட்சி தங்களுக்கு உரிய மரியாதையை கொடுக்கவில்லை என தொண்டர்கள் கூறி வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், வி.சி.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அவ்வபோது தங்களது உள்ள குமுறல்களை தெரிவித்து வருகின்றனர்.

வி.சி.க. நிர்வாகிகளின் கருத்துகள், ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, இரு கட்சிகள் மத்தியில் பனிப்போர் இன்றுவரை தொடர்வதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், வி.சி.க. தலைவர் திருமாவளவன் இவ்வாறு கூறியிருக்கிறார். அதாவது, இப்போதெல்லாம், எம்.பி.க்களுக்கு உரிய மரியாதையே இல்லை என புலம்பி இருக்கிறார்.

திருமாவளவனின் இந்த புலம்பல் ஆளும் கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இது தி.மு.க. கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.


Share it if you like it