சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் வி.சி.க தலைவருமான திருமாவளவன் அவர்களின் பேச்சு தொடர்ந்து சமூகத்தில் ஒரு பதற்றத்தை உருவாக்கும் வகையிலும் அவரை நம்பி பின் செல்லும் பட்டியல் சமூக இளைஞர்களை தவறான பாதைக்கு திசை திருப்பும் முயற்சியிலும் அவரின் பேச்சு அமைந்து உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சரக்கு, மிடுக்கு, என்று இளைஞர்கள் மத்தியில் அவர் பேசிய காணொளி இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இந்நிலையில் திருமா அவர்கள் பருப்பை எடுத்துருவோம் என்று தான் ஒரு எம்பி என்பதை கூட மறந்து விட்டு ஆபாசமாக பேசி இருப்பது மீண்டும் மக்கள் மத்தியில் கோவம் ஏற்படுத்தியுள்ளது.