விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி : வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடக்கம் !

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி : வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடக்கம் !

Share it if you like it

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவும், மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி உயிரிழந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜூன் 14) தொடங்குகிறது. வரும் 21-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24-ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்ப பெற வரும் 26-ம் தேதி கடைசி நாளாகும். அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, வட்ட வழங்கல்அலுவலர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக வேட்பாளராக மாநில விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தேர்தல் பணிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்று, தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகின்றனர். அதிமுக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தெரிகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

இன்று அஷ்டமி என்பதால் யாரும் வேட்பு மனுவைப் பெறவோ, தாக்கல் செய்யவோ வர மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. வார இறுதி விடுமுறை மற்றும் திங்கள்கிழமை பக்ரீத் விடுமுறை கழிந்து, செவ்வாய்க்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *