ஸ்ரீராம ஜென்மபூமி அட்சதையை ஆளுநருக்கு வழங்கிய தன்னார்வலர்கள் !

ஸ்ரீராம ஜென்மபூமி அட்சதையை ஆளுநருக்கு வழங்கிய தன்னார்வலர்கள் !

Share it if you like it

பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கவிருக்கும் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22 அன்று நடைபெறவிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி அன்று நமது பிரதமர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பாரத பிரதமர் மோடி அவர்கள், கோவில் திறப்பு தினத்தன்று நாட்டு மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களில் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்விற்காக , ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பிரமுகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்களை சந்தித்து அழைப்பிதழ் மற்றும் அட்சதையை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் நீண்ட நாள் ஆசை மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் கோவில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த சுபநிகழ்ச்சியில் திரளாக பங்கேற்ற தன்னார்வலர்கள் ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்தித்து ஸ்ரீராம ஜென்மபூமி அட்சதையை வழங்கினர்.


Share it if you like it