எங்களுக்கு பீப் கறி வேண்டும் : மீண்டும் ஹிந்துக்கள் மனதை புண்படுத்திய காங்கிரஸ் !

எங்களுக்கு பீப் கறி வேண்டும் : மீண்டும் ஹிந்துக்கள் மனதை புண்படுத்திய காங்கிரஸ் !

Share it if you like it

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தமிழர்களை இழிவாக பேசியுள்ளதாகவும், ஒரு வாரக் காலத்துக்குள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடும் என செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி தரும் வகையில்,

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.

மேலும், எங்கள் அலுவலகம் வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.

எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், நாங்கள் பாஜக அலுவலக்திற்கு வர தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு அசைவ சாப்பாடு தான் பிடிக்கும். எங்களுக்கு மாட்டுக்கறி (பீப்) மிகவும் பிடிக்கும். அதை சமைத்து கொடுங்கள். நாங்கள் வருகிறோம்.என்று சிரித்துக்கொண்டே நக்கலாக பேசியுள்ளார். தேசிய சிந்தனை கொண்ட ஆதரவாளர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த காணொளியானது தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *