என்னயா காசு பணம், கோடி கோடியா சேர்த்து வச்சு எங்கயா கொண்டு போக போறீங்க !

என்னயா காசு பணம், கோடி கோடியா சேர்த்து வச்சு எங்கயா கொண்டு போக போறீங்க !

Share it if you like it

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்த நிலையில் அவரது உடல் முதலில் சாலிகிராமத்தில் இருந்த அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது.

இட நெருக்கடி காரணமாக சென்னை ராஜாஜி அரங்கில் அவரது உடல் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று அதிகாலை தீவுத்திடலுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. தொடர்ச்சியாக தொண்டர்களும், ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் வாரிக் கொடுக்கும் குணம் குறித்து பேசும்போது அவரது பொதுக்கூட்டத்தின் உரை தவிர்க்க முடியாதது. அந்த பொதுக்கூட்டத்தில், “என்னயா காசு.. காசு.. காசு.. பணம்… அட போங்கயா நீங்களும் உங்க காசும். கோடி கோடியா சேர்த்து வச்சு எங்கயா கொண்டு போக போறீங்க…செத்தா கூட அர்ணாக்கொடியை அறுத்துட்டு தான் பொதைக்குறான்… மக்கள் கொடுத்தது எடுத்தா எடுத்துட்டு போகட்டும். எனக்குனு ஒரு இடம் இருக்கும்ல… நாங்க 4 பேர் வந்தா ஒரு வேளை சோறு போட மாட்டீங்களா? என கூறியிருப்பார். அந்த காணொலி நேற்று அதிகளவு பகிரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share it if you like it