பெண்களை இழிவுபடுத்தும் திமுக ஆபாச பேச்சாளரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?

பெண்களை இழிவுபடுத்தும் திமுக ஆபாச பேச்சாளரின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?

Share it if you like it

தனது சர்ச்சை பேச்சால் சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ள திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்போது ராதிகா சரத்குமார் குறித்து அநாகரிகமாக பேசிய காணொளியானது வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ரவி குறித்து அவதூறாகப் பேசி தி.மு.க-விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார் அந்தக் கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இந்த நிலையில், கடந்த மாதம் அவர்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை ரத்துசெய்து, அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டது தி.மு.க தலைமை.

அதனால் கட்சிப் பணிகளில் மீண்டும் ஈடுபடத் தொடங்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவியையும், பா.ஜ.க நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவையும் அவதூறாக தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்திருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், அதைத் தொடர்ந்து தி.மு.க தலைமை, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் மீண்டும் ஆபாச திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுக தலைமை கட்சியில் இணைத்துக் கொண்டது. இந்நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தனது ஆபாச சர்ச்சை பேச்சை ஆரம்பித்து விட்டார். பிரதமர் மோடி குறித்தும், பாஜக நிர்வாகிகளான ராதிகா மற்றும் சரத்குமார் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதற்கு ராதிகா சரத்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகரும், விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளருமான ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே…அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., shame on திமுக என்று கூறி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ராதிகா சரத்குமார் டேக் செய்துள்ளார்.

நாய் வாயை நிமிர்த்த முடியாது’ என்று ஒரு பழமொழி உண்டு. ஒவ்வொரு முறையும் இவர் தன்னை இந்த உலகத்திற்கு கொண்டு வந்த பெண்ணை அவமதிக்கிறார். அவருடைய வீட்டில் உள்ள பெண்களின் அவல நிலையை கற்பனை செய்து பாருங்கள். இவ்வாறு குஷ்பு பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடக பிரிவின் மாநில துணைத் தலைவர் கார்த்திக் கோபிநாத் எக்ஸ் பதிவில், இந்த பொறுக்கி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் திமுக வழியை நாடியுள்ளார். இவர் மேல் குண்டர் சட்டம் போடுவார்களா ? திமுகவிற்கு எதிரானவர் என்கிற ஒரே காரணத்துக்காக சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்தீர்கள். இந்த முறை அவர் எங்கள் கட்சித் தலைவரின் நாகரீகத்தை இவ்வளவு கேவலமான மொழியில் கொச்சைப்படுத்தி உள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே உங்கள் கழக உபிகள் மனித சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளனர். கனிமொழி அக்கா இதை எதிர்த்து பேச உங்களுக்கு தைரியம் இருக்கா ? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி அக்கா இதை எதிர்த்து பேச உங்களுக்கு தைரியம் இருக்கா ? – பாஜக சமூக ஊடக மாநில துணைத் தலைவர் கார்த்திக் கோபிநாத் !


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *