சிங்கார சென்னையில் இப்படியும் நடக்குமா ? திடுக்கிடும் சம்பவம் !

சிங்கார சென்னையில் இப்படியும் நடக்குமா ? திடுக்கிடும் சம்பவம் !

Share it if you like it

சென்னையில் நேற்று ஒரே நாளில் ரூ.180 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதிகை ரயிலில் போதைப்பொருள் கடத்திய நபரை நேற்று மதுரையில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்த நிலையில் அவரிடம் இருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் கூறிய தகவலின்பேரில் சென்னையில் குப்பை தொட்டியில் இருந்து போதைப்பொருள் பறிமுதலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது கடந்த மாதம் டெல்லி கைலாஷ்பார்க் பகுதியில் உள்ள குடோனில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்த போதைப்பொருள் கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை அதிகாரிகள் தேட தொடங்கிய நிலையில் அவர் தலைமைறைவானார். அவரை தற்போது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர்கள் தேடி வருகின்றனர். அவரது சென்னை வீட்டில் சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே தான் ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.


Share it if you like it