மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு வரும் செப்டம்பர் மாதம் 15- ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசிலிக்கப்பட்டு வருகின்றன. 2- கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் 1.55 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைப்பேசி வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுபட்டவர்கள் நாளை முதல் (வெள்ளிக்கிழமை) மூன்று நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அரசு அறிவித்துள்ளது.