அப்பாவி மக்களை தூண்டியதாக தில்லி காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி கைது!

அப்பாவி மக்களை தூண்டியதாக தில்லி காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி கைது!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் டில்லி நகர முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் இஷ்ரத் ஜஹான். இவர் 50 நாட்களுக்கும் மேலாக ஷாகீன் பாக் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்.  போராட்டத்தில் பங்கேற்க விருப்பம் இல்லாமல் வெளியேற முயலும் பெண்களை கட்டாயப்படுத்தி அங்கேயே இருக்குமாறு பணித்துள்ளார்.

ஆஸாதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்றும், வன்முறையை தூண்டிய வகையிலும் பேசியுள்ளார்.
இவ்வாறு பேசுவது தவறு என்று கூறிய போலீசாரையும் தாக்கியுள்ளார். இதையடுத்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு, இவரும் மேலும் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கைதுப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள், உருட்டு கட்டைகள், மற்றும் இரும்பு தடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர் மீது, 2014-ம் ஆண்டு அரசு ஊழியரை தாக்கிய வழக்கு நிலுவையில் உள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இஷ்ரத் ஜஹான், சிறையில் அடைக்கப்பட்டார். பெண்ணாக இருந்தாலும், இவர் செய்த குற்றத்திற்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுத்துவிட்டது.


Share it if you like it