அமித்ஷாவிற்கு மரணம் வர வேண்டும் என்று கருத்தை கூறிய பத்திரிக்கையாளர்- விஜயலட்சுமி நாடார்!

அமித்ஷாவிற்கு மரணம் வர வேண்டும் என்று கருத்தை கூறிய பத்திரிக்கையாளர்- விஜயலட்சுமி நாடார்!

Share it if you like it

அண்மையில் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பணிபுரியும் காஷ்மீர் ‘பத்திரிகையாளர்’ சாமியா லத்தீப் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று சோதனை செய்ய வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மோடி, அமித்ஷாவிற்கு கொரோன தொற்று சோதனை செய்யவும் பத்திரிகையாளர் சாமியா லத்தீப்

இந்நிலையில் மீண்டும் ஒரு பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் தனது உள்ளத்தின் அழுக்கை காட்டியுள்ளார் விஜயலட்சுமி நாடார்.

சில மாதங்களுக்கு முன்பு அமித்ஷா அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும். புற்று நோயாக அது மாறியது போல் தெரிகிறது என்று கூறியுள்ளார். உடல் நலனை பற்றி ஜோதிடர்கள் அக்டோபர் வரை என்று கணித்துள்ளார்கள், இது முடிவடையும் என்று நான் நம்புகிறேன். மனித குலத்தின் நலனுக்காக சில மரணங்கள் விரைவாகவும் கொண்டாடப்படலாம் என்று அருவெறுக்க தக்கவகையில் தனது வன்மம் நிறைந்த கருத்தினை பதிவிட்டுள்ளார்.

நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவரை பற்றி தான் பத்திரிக்கையாளர் என்பதை கூட மறந்து விட்டு தன் டி.என்.ஏ.வில் ஊறிய அழுக்கை வெளிப்படுத்தியுள்ளதற்கு பலர் தங்களின் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it