அமெரிக்கா வெளியேற உத்தரவிட்ட மறுகணமே…! முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்திய சீன தூதரக அதிகாரிகள்…!

அமெரிக்கா வெளியேற உத்தரவிட்ட மறுகணமே…! முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்திய சீன தூதரக அதிகாரிகள்…!

Share it if you like it

சீனாவின் ஆணவ போக்கிற்கு தற்பொழுது கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதை உலக மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 59 சீன செயலிகளுக்கு தடை மற்றும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு  மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவை சுட்டிக்காட்டி அண்மையில் அமெரிக்கா சீன நிறுவனத்திற்கு பல்வேறு கட்டுபாடுகளை தனது நாட்டில் விதித்தது. இதன் தொடர்ச்சியாக  ஹூஸ்டன் பகுதியில் அமைந்துள்ள சீன தூதரகத்தை உடனே மூடுமாறு அமெரிக்கா அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இதனை அடுத்து சீன உயர் அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் தீயணைப்பு வீரர்களை தூதரக அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பது உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it