ஆபாச திமுக பேச்சாளர் பிரசன்னா மீது பாஜக அஸ்வத்தாமன் காவல்துறையில் புகார்!

ஆபாச திமுக பேச்சாளர் பிரசன்னா மீது பாஜக அஸ்வத்தாமன் காவல்துறையில் புகார்!

Share it if you like it

தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று அண்மையில் கூறிய தயாநிதி மாறன் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளையும் அக்கட்சி எடுக்காததற்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் பிரசன்னா நேற்று இரவு பாரதப் பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றியதை இவ்வாறு  கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார்.

ஷகிலா படத்தில் வருகிற ஹீரோ இப்படித்தான் பேசுவான் பேசுவான்… உலக தத்தும்லாம் பேசுவான். படம் பார்ப்பவர்கள் டேய் சீக்கிரம் பேசித் தொலைடா என்பது போல பார்த்துக் கொண்டிருப்பார்கள்….

ஒரு தேசமே….

நாளுக்கு நாள் பிரசன்னாவின் ஆபாசம் நிறைந்த பேச்சு மக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பிரதமர் பற்றியும், மக்களை பற்றியும், இவ்வாறு இழிவாக பேசியதற்கு தமிழக தலைவர்கள் பலர் கடும் கண்டம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.அஸ்வத்தாமன், வழக்கறிஞர்,
மாநில செயலாளர் – சட்டப் பிரிவு ,
பாரதிய ஜனதா கட்சி,

பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் மாண்பையும் மரியாதையையும் குலைக்கும் வகையில் கொச்சையான அவதூறுகளை சமூக வலைதளங்களில் பதிவிடுதல் மற்றும் அதை பரப்புதல், மக்களிடையே தேசத்தின் மீதான வெறுப்புணர்வை தூண்டுதல், ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும்

blank

நோக்கத்தில் பதிவிடுதல் ,ஒரு பிரிவினரை தூண்டி , சீனம் ஊட்டி அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தவும், சமூக நல்லிணக்கத்தை குலைக்கவும் முயற்சித்தல், தேசத்தின் மாண்பு மற்றும் இறையாண்மையை குலைக்கும் வகையில் செயல்படுதல் மற்றும் பதிவிடுதல் ஆகிய குற்றங்களுக்காக பிரசன்னா என்பவர் மீது அஸ்வத்தாமன் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it