இரத்த ஆறு ஓடிய காபூல் ..! 100- க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலி..!தாலிபான்களுக்கு முட்டு கொடுத்த போராளிகள் வாய் திறப்பார்களா?

இரத்த ஆறு ஓடிய காபூல் ..! 100- க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலி..!தாலிபான்களுக்கு முட்டு கொடுத்த போராளிகள் வாய் திறப்பார்களா?

Share it if you like it

ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அவர்களின் அடக்கு முறை, அட்டூழியத்திற்கு, பயந்து உள்நாட்டு மக்களே அண்டை நாடுகளை நோக்கி ஓடும் பரிதாபத்தை கண்டு உலக மக்கள் தங்களின் வேதனைகளை இன்று வரை பதிவு செய்து வரும் நிலையில்.

தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமிய மதகுரு மெளலான காசிமி, சீமான், அமீர் போன்றவர்கள் தாலிபான்களுக்கு முட்டு கொடுக்கும் விதமாக பேசிய காணொளிகள் கடும் கோவத்தையும், வெறுப்பையும் மக்கள் மத்தியில் உருவாக்கி வரும் இச்சூழலில் நேற்றைய தினம் காபூலில் நடைபெற்ற இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியாகி சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்கும் விதமாக தாலிபான்களுக்கு ஆதரவாக பேசிய போராளிகள் உயிர் இழந்த அப்பாவி மக்களுக்கு தங்களின் இரங்கலை தெரிவிப்பார்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it