துப்பாக்கி பிடிக்கும் குரங்குகள் – அமெரிக்கா விட்டுச் சென்ற பேரபாயம்..!

துப்பாக்கி பிடிக்கும் குரங்குகள் – அமெரிக்கா விட்டுச் சென்ற பேரபாயம்..!

Share it if you like it

சிலசமயங்களில் நாம் பெரிய புத்திசாலிகள் பலசாலிகள் என்று நம்பப் படுபவர்கள் படு முட்டாள்களாக அல்லது பலவீனமானவர்களாக அறிய நேரும் போது அதிர்ச்சியை தாண்டி வியப்பே மிஞ்சி நிற்கிறது.

உலகையே ஆட்டுவிக்கும் பெரும் வல்லரசு நாடு உலகின் அதி நவீன ஆயுதங்களை தயாரித்து உலகுக்கே விற்கும் நாடு அமெரிக்கா!

இவர்கள் சென்ற வருடம் உலகின் மோசமான மத தீவிர வாத கூட்டத்துடன் கத்தார் நாட்டில் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இத்தனைக்கும் இருவரும் கடந்த 20 வருடமாக சண்டையிட்டு கொண்டு பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கியவர்கள்.

அப்படியிருக்க உலகின் ஒரே வல்லரசு என்று மார்தட்டும் அமெரிக்கா, தோளில் தொங்கும் பெரிய கம்பளி, முகத்தில் வளர்ந்த தாடி தவிர குறுக்காக ஒரு 47 ரக துப்பாக்கி மட்டும் வைத்திருக்கும் ஒரு வழிப்பறி கூட்டத்தினிடம்

என்ன பேச இருக்கிறது.?

இது எப்படி இருக்கிறது என்றால் தமிழக டிஜிபி அயோத்தியா குப்பத்தை சேர்ந்த கஞ்சா விற்கும் வீரமணியிடம் பேச்சு வார்த்தை நடத்தி அமைதி வேண்டுவது போன்றதாகும்.

இத்தனைக்கும் கடந்த 20 வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து உச்ச பட்சமாக 2011 ல் சுமார் 1 லட்சம் வீரர்களை ஆப்கானிஸ்தானில் நிறுத்தியது.

கடைசியாக இன்று வெளியேறும் போது அவர்களின் துருப்புகள் வெறும் 4000 என்று கணிக்கப் படுகிறது.

சரி.. இத்தனை நாள் இவர்கள் போராடிய அந்த தாடிபான்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று யாராவது கேட்டு இருக்கிறீர்களா?  யாருக்கும் சரியான எண்ணிக்கை தெரியாது.

உலகில் நீங்கள் கம்மாங்கரையில் ஒதுங்கினாலும் நாங்கள் எங்கள் வின் கோள்கள் கொண்டு கண்டுபிடிப்போம் என்று உதார் விட்டு திரிந்த பெரியண்ணன் இதுவரை தாங்கள் எத்தனை பேருடன் போரிடுகிறோம் என்று கூட அறியாமல் சண்டையீட்டு வந்துள்ளனர்.

இதெல்லாம் என்ன மாதிரியான வலிமை!! ரெம்ப கேவலமா இருக்கே!!

கடைசியாக வந்த உறுதி செய்யப் படாத தகவல் படி இந்த தாடிபான்கள் சுமார் 27,000 பேர்களே!

என்ன கருமம்…… இவர்களுக்கு வீடு வாசல் குடும்பம் என்று ஒரு ஆதாராமான இடம் எதுவுமில்லாமல் நாடோடிகளாக இதுவரை இருந்துள்ளனர். இப்படி திக்கு இல்லாமல் திசையில்லாமல் பாலைவனத்தில் திரியும் இவர்களை ஒழிக்க முடியாமலதான் ரஷ்யாவும் தோற்றது. நம்ம பெரியண்ணனும் இன்று தோற்று வெளியேறுகிறார்.

சரி.. சென்ற வருட பேச்சு வார்த்தையில் இந்த தாடிபான்களிடம் அப்படி என்ன பேசியது என்று அமெரிக்கா இதுவரை வெளியிடவே இல்லை !

இந்த வருடம் வெளியேற போகிறோம் என்று சொன்னாலும் தான் சென்ற பிறகு ஆப்கானின் நிலைமை என்ன என்று திட்டமே இல்லாமல் அடித்து பிடித்து வெளியேற வேண்டிய அவசியம் என்ன?

இது இன்றுவரை புரியாத புதிர் !

வெறும் 47 வகை துப்பாக்கி வைத்திருப்பவனிடம் அணுகுண்டு வைத்திருக்கும் ஒரு வல்லரசு மண்டியிட்டு கொடியில் காய போட்டிருக்கும் ஜட்டியை கூட எடுக்க நேரமில்லாமல் வெளியேறுவது எத்தனை கேவலம்?

இவர்கள் இரவோடு இரவாக ஓடும் போது விட்டுச் செல்லும் ராணுவ தளவாடங்கள் எவ்வளவு தெரியுமா?

200 அதி நவீன ஹெலிகாப்டர்கள் உட்பட போர் விமானங்கள்.

70000 அதி நவீன வாகனங்கள்!

6,00,000 சிறிய/கனரக துப்பாக்கிகள்

இதை தவிர 2,00,000 க்கும் அதிகமான புல்லட் பருப் ஜாக்கெட்டுகள், அதி நவீன இரவு நேர கண்ணாடிகள்

தொலை நோக்கிகள் என்று பட்டியல் பெரிது.

இவைகளின் மதிப்பு என்ன தெரியுமா?

சுமார் (மனதை திடப் படுத்திக் கொள்ளுங்கள்)

62 லட்சம் கோடி ரூபாய்கள்.

ஆமாம்.. நீங்கள் சரியாகத்தான் படிக்கிறீர்கள்.

அமெரிக்க மதிப்பில் 85 பில்லியன் டாலர்கள். இதை அமெரிக்க படை அதிகாரியே ஒத்துக் கொள்கிறார்.

இதில் இந்தியாவுக்கு சமீபத்தில் பெருமிதமாக அமெரிக்க விற்ற பிளாக் ஹாக்ஸ் என்கிற அதி நவீன ஹெலிகாப்டர்களும் அடக்கம்.

சரி…. இவர்கள் இதற்கு ஒரு சாக்கு சொல்லலாம்.

நாங்கள் வெளியேறிய பிறகு உள்ளூர் ராணுவம் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் என்று நம்பினோம் என்று சொல்லலாம்.

ஆனால் இவர்கள் இப்படி தளவாடங்களை மட்டும் விட்டு செல்லவில்லை!  கடந்த 20 வருடமாக ஆப்கானில் தங்களுடன் பணியாற்றிய உள்ளூர் மற்றும் வெளியூர் ஆட்களின் “பயோ மேட்ரிக்” தகவல்களையும் இன்னும் கணக்கில் வராத விவரங்களையும் விட்டு செல்கிறனர்.

இதனால் என்ன என்கிறீர்களா?

இப்போது வந்திருக்கும் தாடிபான்கள் அந்த தகவல்களின் மூலம் கைரேகை பதிவு இயந்திரம் கொண்டு அமெரிக்காவுடன் இணைத்து பணியாற்றிய உள்ளூர் குடும்பங்களை கண்டறிந்து தேடி தேடி அழித்து பழி வாங்குவார்கள். இத்தனை நாள் உங்களுக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்கு இது தேவையா?  இந்த கைரேகை ரெக்கார்ட் இல்லாவிட்டாலாவது தப்பி பிழைத்திருப்பார்கள்.

குப்புற கவிழ்த்த குதிரை குழியும் பறித்ததாம்.

20 வருடம் சண்டையிட்ட சண்டைக்காரனுக்கு போகும் போது போனசாக கொடுத்து செல்கின்றனர்.

சரி.. இந்த தாடிக்காரன்களுக்கு இந்த விமானத்தையோ அதி நவீன ஹெலிகாப்டர்களையோ இயக்க தெரியாது.

எனவே ரொம்ப பயப்பட வேண்டாம் என்று நினைக்காதீர்கள்.

இருக்கவே இருக்கான் நம்ம பக்கத்து ஊரு பங்காளி!

பக்கி பயல்கள் உடனே “ஆண்டவனே உயர்ந்தவன்” என்று கத்தி கிட்டு காசு இல்லைன்னா அபினை கூலியாக  வாங்கிட்டு அவனுக்கு வேலை செய்ய போவான்.

ஏன்னா.. இவனுக்கு அந்த விமானங்களை காசு கொடுத்து வாங்க முடியாது. ஏற்கனவே போண்டி !!

இனி கூலிக்கு மாரடிக்க வேண்டியதுதான்.

அடுத்து இந்த தாடிக்காரங்களுக்கு உதவ வந்திருக்கும் புதிய கனவான் சீனா இந்த தளவாடங்களை இயக்கி உதவி செய்யலாம்.

என்ன கூத்தோ!!!!

வலைதளத்தில் கிடைக்கும், குரங்கு கையில் ஆட்டோமேடிக் துப்பாக்கி சிக்கிய வீடியோவில் நடப்பது போன்று நடக்க போகிறது.

ஆப்கான் கற்றுதரும் பாடம்.

உன் நாட்டு போராட்டத்தை நீ தான் நடத்த வேண்டும்.

அடுத்தவன் வந்து உதவுவான் என்று உட்காரந்திருந்தால் இதுதான் கதி.

மதத்தின் பெயரால் தான் இவை நடக்கிறது என்றால் உலகிற்கு அந்த மாதிரி மதமே வேண்டாம் என்று எழுந்து வாருங்கள்.

நன்றி.

ரவி சுந்தரம்

 


Share it if you like it