இவர்கள் அமைச்சர்களா அல்லது பாணபத்திர ஓணாண்டிகளா?

இவர்கள் அமைச்சர்களா அல்லது பாணபத்திர ஓணாண்டிகளா?

Share it if you like it

இவர்கள் அமைச்சர்களா அல்லது பாணபத்திர ஓணாண்டிகளா? என்று  மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • கல்லுக்கும் உங்களுக்கும் என்ன உறவோ தெரியவில்லை. உங்களின் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி புரட்டி போட்டது தமிழ் திரை உலகை. ஒரே ஒரு செங்கல் புரட்டி போட்டது ஆட்சி அதிகாரத்தை. முன்பெல்லாம் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு போனால் தோனி வந்தால் தான் கூட்டம் வரும். இப்ப நம்ம அருமை சகோதரர் உதயநிதி வந்தாலே கூட்டம் வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் சட்டசபையில் உதயநிதியை புகழ்ந்து பேசி இருந்தார்.
  • உதயநிதியை பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி அண்மையில் புகழ்ந்து பேசி இருந்தார்.
  • அதனை தொடர்ந்து 1, 2, என வரிசைபடுத்தி தமிழக முதல்வரை புகழ்ந்து சமீபத்தில் துதிபாடி இருந்தார் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன்.
  • இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழக முதல்வரை புகழ்ந்தும் தனது மனதில் உள்ள ஏதோ ஒரு பிரச்சனையை தனக்கு தகுந்தாற் போல் சட்டசபையில் பேசியுள்ளார்.
  • அமைச்சர்களின் செயல்பாடுகளை பார்க்கும் பொழுது 23-ம் புலிகேசி படத்தில் வரும் பாணபத்திர ஓணாண்டி படத்தில் வரும் புலவரையே நமது அமைச்சர்கள் ஓவர் டேக் செய்து விடுவார்கள் என்று மக்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it