உள்கட்சி  பூசல்-சிவசேனா அலறல்!

உள்கட்சி பூசல்-சிவசேனா அலறல்!

Share it if you like it

கூட்டணி கட்சிகளின்  கூத்து, உள்கட்சியினரின் உள்குத்து என தினமும் கத்தியின் மேல் நடப்பது போல் உள்ளதே, என் பிழைப்பு என்னும் நிலையில் வண்டி ஓட்டி வருவகிறார் உத்தவ் தாக்கரே. மேலும்  தம் கட்சி நிர்வாகிகள் வேறு கட்சியில் சென்று விடக்கூடாது என அவர்களையும்  அடைக்காத்து வரும் நிலையில்

அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் உத்தவ் தாக்கரேவின் செயல் பிடிக்காமல் , அதிரடி பேச்சிற்கு உரியவரான ராஜ்தாக்கரேவின் (எம்.என்.எஸ்) கட்சியில் இனணந்திருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மற்றும் என்.சி.பி உடன் கூட்டணி அமைத்ததை பலரும் விரும்பாத நிலையில் அவர்களை தொடர்ந்து  அதிருப்தியில் உள்ளவர்கள் பலர் அக்கட்சியில் இருந்து வெளியேறுவர் என அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.


Share it if you like it