ஓட்டுக்காக தான் நிவாரண உதவி தயாநிதி மாறன் போல் தமிழக மக்களை இழிவுப்படுத்திய- கே.என்.நேரு!

ஓட்டுக்காக தான் நிவாரண உதவி தயாநிதி மாறன் போல் தமிழக மக்களை இழிவுப்படுத்திய- கே.என்.நேரு!

Share it if you like it

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை, எளியவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி, இன்னும் சில சமூக தொண்டு நிறுவனங்கள். ஏழைகள் இருக்கும் இடத்திற்கே சென்று உதவிகளை செய்து வருகின்றனர்.

எதிர்க்கட்சி என்ற முறையில் திமுக களத்தில் இறங்கி மக்களுக்கு உதவிகள் செய்யாமல் வழக்கம் போல் மத்திய, மாநில அரசுகளை, விமர்சனம் செய்தும் ’ஒன்றிணைவோம் வா’ என்கின்ற திட்டத்தின் மூலம் வெற்று விளம்பரம் செய்து வருவதாக மக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ வுமான கே.என்.நேரு அண்மையில் பத்திரிக்கையாளரை சந்திக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.

மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக தான் தாங்களும் நிவாரண உதவிகளை செய்கிறோம் என்று அவர் கூறியுள்ளார். அண்மையில் தயாநிதி மாறன் தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்று இழிவுப்படுத்தி பேசி இருந்தார். தற்பொழுது நேரு ஓட்டுக்காக தமிழக மக்களுக்கு உதவிகள் செய்கிறோம் என்று கொச்சைப்படுத்தி பேசி இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it