காட்டில் அதிசயம் நிகழ்த்திய நீலகிரி எக்ஸ்பிரஸ்…!

காட்டில் அதிசயம் நிகழ்த்திய நீலகிரி எக்ஸ்பிரஸ்…!

Share it if you like it

நிலக்கிரி மாவட்டம் குன்னுர் பகுதியை சேர்ந்த போஸ்ட்மேன் டி. சிவன் என்பவர் அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். போக்குவரத்து வசதியில்லாத  பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வரும் கடிதங்கள், மற்றும் பார்சல் பொருட்களை  ஆபத்து நிறைந்த காட்டு பகுதியில் தனி ஒருவராக சென்று சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

Image

காட்டு யானைகள், கரடிகள், வழுக்கும் நீரோடைகள், அட்டை பூச்சிகள், கொடிய விலங்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளையும் கடந்து தினமும் 15 கி.மீ. நடந்தே திரு.சிவன் அப்பணியை செய்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது பணியை செய்து வந்துள்ளார். அண்மையில் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it