காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகள் இரத்த ஆறு ஓட காரணமாக இருந்த பிரிவினைவாதியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த – திருமுருகன் காந்தி..!

காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகள் இரத்த ஆறு ஓட காரணமாக இருந்த பிரிவினைவாதியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த – திருமுருகன் காந்தி..!

Share it if you like it

பாகிஸ்தான் அரசின் கைப்பாவையாக செயல்பட்டு இரண்டு தலைமுறைக்கு மேல் ஜம்மூ காஷ்மீர் மக்களின் நிம்மதியை அழித்தவர்கள் பலர். அதில் மிக  முக்கியமான நபர்களில் சையத் அலி ஷா கிலானியும் ஒருவர். காஷ்மீர் பிரிவினைவாதிகளின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.

அப்பாவி காஷ்மீர் இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைத்து, பாரத தேசத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் எண்ணத்தையும், கடந்த 30 ஆண்டுகள் காஷ்மீரில் இரத்த ஆறு ஓட காரணமாகவும். காஷ்மீரை தனி நாடாக மாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டவர் இந்த பயங்கரவாதி கிலானி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்நிலையில் உடல் நலகுறைவு காரணமாக பயங்கரவாதி கிலானி இன்று மரணம் அடைந்தார். அதற்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவருக்கு தனது இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளார். தீவிரவாதிகளிடம் இருந்து காஷ்மீரை காக்க தங்கள் இன்னுயிரை தந்த நமது ராணுவ வீரர்களுக்கு திருமுருகன் காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி..

 

Stalin meets May 17 movement activist Gandhi in hospital - DTNext.in

Vaiko Visits Thirumurugan Gandhi! | NETTV4U


Share it if you like it