குடி போதையில் பெண் காவல் ஆய்வாளரிடம் கலாட்டா…! திமுக  ஒன்றிய செயலாளர் மீது..! 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…!

குடி போதையில் பெண் காவல் ஆய்வாளரிடம் கலாட்டா…! திமுக ஒன்றிய செயலாளர் மீது..! 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…!

Share it if you like it

திமுக தலைவர் ஸ்டாலின் என்று பிரியாணி கடையில் மன்னிப்பு கேட்க ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து நெட்டிசன்கள் திமுகவையும், அக்கட்சி நிர்வாகிகளையும் கிண்டல் செய்து வருகின்றனர். தினம் ஒரு மீம்ஸ், சமூக ஊடகங்களில் உலா வருவது அனைவரும் அறிந்ததே!

அண்மையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழமட்டையான் கிராமத்தின் திமுக கிளைச் செயலாளரும், மேலக்கால் ஊராட்சியின் துணைத் தலைவருமான சித்தாண்டி, அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே தினமும் மது அருந்தி விட்டு தனது நண்பர்களுடன் மது போதையில் CC TV-யிடம் கலாட்டா செய்த சிரிப்பு சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் தற்பொழுது நிகழ்ந்துள்ளது.

புதுகோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி நேற்று இரவு தனது காரில் வந்துள்ளார். வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த பெண் காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி அவரின் காரை வழி மறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

பெண் காவல் ஆய்வாளர்

இதனை அடுத்து இருவருக்கும் கடும் வாக்கு வாதம் நிகழ்ந்தது. உயர் அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் அடைக்கலமணி மீது காவல்துறை நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் திமுகாவின் அட்டூழியங்கள் அதிகரித்து கொண்டே செல்வது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it