கேரளாவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், தமிழர்களுக்கு அல்வா-கம்யூனிஸ்டுகளின் பித்தலாட்டம் !

கேரளாவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், தமிழர்களுக்கு அல்வா-கம்யூனிஸ்டுகளின் பித்தலாட்டம் !

Share it if you like it

கேரளாவில் இன்று விஷு என்கிற விழா கொண்டாடப்படுகிறது. அதாவது கேரள மக்களுக்கு இன்றுதான் புத்தாண்டு விழா. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் கேரளா மக்களுக்கும் மற்றும் அனைத்து மலையாளிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன் தமிழர்களின் தமிழ் புத்தாண்டு விழா வந்தது. ஆனால் அந்த விழாவிற்கு எந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய விழா வரும்போது மட்டும் மிகவும் ஆனந்தமாக முதல் ஆளாய் வாழ்த்து தெரிவிப்பார். அதுவே ஹிந்துக்கள் பண்டிகை என்றால் ஸ்டாலின் அவர்கள் கோமா நிலைக்கு சென்று விடுவார்.

ஒரு பெரிய எதிர்கட்சியாக இருக்கும் திமுக கட்சி ஹிந்துக்களை மட்டும் வெறுத்து ஒதுக்கி வைக்கிறது. ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் எல்லாவற்றையும் மறந்து ஹிந்துக்களிடம் ஓட்டு கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.இவ்வாறு கம்யூனிசத்தையும், திமுகவையும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it