கொரோனாவுக்கு எதிராக நம் பலத்தை நிரூபிக்க  இந்தியாவின் 130 கோடி மக்களும் தீபம் ஏற்றுவோம் – முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி !

கொரோனாவுக்கு எதிராக நம் பலத்தை நிரூபிக்க இந்தியாவின் 130 கோடி மக்களும் தீபம் ஏற்றுவோம் – முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி !

Share it if you like it

  • இன்று காலை 9 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் மக்களுக்கு நன்றியை தெரிவித்தார். மேலும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு வீட்டு பால்கனியில் நின்றுகொண்டு அகல் விளக்கு அல்லது டார்ச் வெளிச்சத்தை ஒளிர விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி ட்வீட் செய்துள்ளார். அதில் கொரோனா வைரசுக்கு எதிராக நம் பலத்தை நிரூபிக்க இந்திய நாட்டின் 130 கோடி மக்களும் விளக்கில் ஒளியை ஏற்றி வைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

  • மேலும் இந்த கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கும் இதற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ஒவ்வொரு நபருக்கும் வீட்டிலேயே இருக்க தனது சொந்த பங்கு உள்ளது. எங்கள் அணி தலைவரான பிரதமர் நரேந்திர மோடியை நினைத்து நாங்கள் பெருமை அடைகிறோம். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்தி, அலைபேசிகள் மூலம் ஒளிரவிட செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.


Share it if you like it