கொரோனா தொற்றில் சிகிச்சை பலனின்றி மராட்டியத்தில் முதியவர் ஒருவர் பலி!

கொரோனா தொற்றில் சிகிச்சை பலனின்றி மராட்டியத்தில் முதியவர் ஒருவர் பலி!

Share it if you like it

கொரோனா தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 15,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்தொற்று நோயின் கோர பிடியில் இருந்து, மருத்துவர்களின் மகத்தான சேவையின் மூலம் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 65 வயது முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுவரை இந்தியாவில் 10 பேர்  கொரோனா கோர பிடியில் இருந்து மீள முடியாமல் உயிர் இழந்துள்ளனர். கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் தமிழகத்தில் ,பரவி வருவதாக தமிழக சுகாதாரத்துறை, அமைச்சர் விஐய பாஸ்கர், சட்டபேரவையில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 


Share it if you like it