சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிட்டவரை அவரது மாமனார் வீட்டில் கைது செய்து மாமனார் வீட்டுக்கே  அனுப்பிய காவல்துறை !

சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிட்டவரை அவரது மாமனார் வீட்டில் கைது செய்து மாமனார் வீட்டுக்கே அனுப்பிய காவல்துறை !

Share it if you like it

சமூக வலைத்தளங்களில் மன்னை சாதிக் என்ற பெயரில் வித்தியாசமாக நடித்து பிரபலமாகி பின் சினிமாவில் துணை நடிகராக நடித்து வந்தவர் சாதிக் பாட்ஷா. இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர். கடந்த 11 ஆம் தேதி சாதிக் பாட்ஷா தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புகைப்படத்தை தவறாக சித்தரித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மன்னார்குடி பாஜக நகர செயலாளர் ரகுராமன், மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சாதிக் பாட்ஷாவை, திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அவரது மாமனார் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்து மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.பின்னர் அவர் மன்னார்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


Share it if you like it