சலுகைகள் வாங்க எங்ககிட்ட ஆதாரம் இருக்குங்க, ஆனா என்.ஆர்.சிக்கு மட்டும் எந்த ஆதாரமும் இல்லைங்க !

சலுகைகள் வாங்க எங்ககிட்ட ஆதாரம் இருக்குங்க, ஆனா என்.ஆர்.சிக்கு மட்டும் எந்த ஆதாரமும் இல்லைங்க !

Share it if you like it

  • இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அனைவரும் மத்திய அரசு கொண்டு வந்த என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். கொரோனா வைரசால் தற்போது அவர்களின் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் சென்னை திருநின்றவூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அமைப்பு ஒன்று முதியோர்,விதவைகள்,உடல் ஊனமுற்றோர்,கணவனால் கைவிடப்பட்டோர் போன்றவர்களுக்காக உதவித்தொகையை வழங்க நலத்திட்ட நிதி உதவி முகாம் ஒன்றை மார்ச் 21 அன்று நடத்த திட்டமிடப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்க, அதில் உதவிதொகையை பெறுவதற்கு வருபவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை,வாக்காளர் அட்டை,வங்கி கணக்கு புத்தகம்,இறப்புச்சான்றிதழ், மருத்துவ சான்றிதழ் முதலிவற்றை கொண்டு வர வேண்டும் என போடப்பட்டுள்ளது.
  •  மத்திய அரசு கொண்டு வந்த என்.ஆர்.சி திட்டத்திலும் இதே ஆவணங்களை தான் கேட்கிறார்கள். அப்படி இருக்கும்பொழுது எதற்காக இவர்கள் போராடுகிறார்கள் என்று குழப்பமாக உள்ளதென்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share it if you like it