டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை பற்றி போலீசாருக்கு தகவல் – உபியில் மோதல் !

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை பற்றி போலீசாருக்கு தகவல் – உபியில் மோதல் !

Share it if you like it

  • உபி மாநிலம் அப்பூர் அருகே உள்ள சரவா கிராமத்தில் இருந்து சில தப்லிகி ஜமாஅத் பங்கேற்பாளர்களை காவல்துறையினர் சில நாட்களுக்கு முன் கைது செய்து தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் அந்த கிராமத்தில் நிலைமை பதற்றமாகவே இருந்தது. சில இந்துக்களால் இந்த தகவல்கள் காவல்துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு அனுப்பப்பட்டதாக அப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் சந்தேகித்தனர். இதனால் அங்குள்ள முஸ்லிம்கள் ஹிந்துக்கள் மீது கோபமாக இருந்தனர்.
  • இந்நிலையில் பிரசாந்த் என்பவர் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது ஏற்கனவே அங்கிருந்த  இளைஞரான இம்ரான் வேண்டுமென்றே அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிப்போக இம்ரானுடன் பல  இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்த நபரை தாக்கியுள்ளனர்.
  • மேலும் இந்த சம்பவத்தில் பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்தனர். தகவல்களைப் பெற்று சம்பவ இடத்தை அடைந்த காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர லத்தி சார்ஜ் செய்தனர். கிராமத்தில் பலத்த போலீசார் நிறுத்தப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
  • கலவரம் செய்தவர்களில் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். தாக்கப்பட்ட பிரசாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share it if you like it